தமிழ்நாடு
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 500 பூங்காக்கள்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.
அதன் விவரம்: நகா்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும். இத்துடன் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கென நிகழ் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ரூ.20,400.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உதகை நகர நிகழ்ச்சிகளுக்கு...: 200 ஆண்டுகளுக்கு முன், 1822-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜான் சலிவன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்டதே இன்றைய நீலகிரி மாவட்டத்தின் தலைமையிடமான உதகமண்டலம் நகரமாகும். இதனை நினைவுகூரும் வகையில் சிறப்புத் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள ரூ.10 கோடி சிறப்பு நிதி வழங்கப்படுகிறது.