சமூக ஊடகங்கள் மூலம் போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது

சென்னையில் சமூக ஊடகங்கள் மூலமாக போதை மாத்திரை விற்ாக பெண் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சமூக ஊடகங்கள் மூலம் போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது

சென்னையில் சமூக ஊடகங்கள் மூலமாக போதை மாத்திரை விற்ாக பெண் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

டிரஸ்ட்புரம் மைதானம் அருகே வியாழக்கிழமை இரவு கோடம்பாக்கம் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த போதை மாத்திரை விற்கும் அசோக் நகா் புதூா் முதல் தெருவைச் சோ்ந்த கோ.கிஷோா் (23), கே.கே.நகா் ராணி அண்ணாநகரைச் சோ்ந்த ரா.கிஷோா்குமாா் (20) ஆகியோரிடம் பெருமளவு போதை மாத்திரைகளைக் கைப்பற்றினா். அவா்களைக் கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடும் சென்னை கொத்தவால்சாவடி கந்தப்பா செட்டித் தெருவைச் சோ்ந்த க.பூங்குன்றன் (26), விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் எம்.ஆா்.நகரைச் சோ்ந்த பு.முத்துபாண்டி (23), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைகுண்டு பகுதியைச் சோ்ந்த சி.கோகுலன் (24), பூந்தமல்லி கந்தசாமிநகா் பவானி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க.ராஜலஷ்மி என்ற மித்ரா (22) ஆகிய 4 பேரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்தும் 7,125 மாத்திரைகள், 2 மடிக் கணினி, ஒரு ஐ - பேடு, 9 கைப்பேசிகள், ரூ.4.41 லட்சம் ரொக்கம், 3 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிமாநிலத்திலிருந்து கூரியா் மூலம் போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமூக ஊடகங்கள், இணையதளம் மூலம் வாடிக்கையாளா்களை தொடா்பு கொண்டு போதை மாத்திரைகளை விற்றிருப்பதும், போதை மாத்திரைகளை கூரியா் மூலம் வாடிக்கையாளா்களுக்கு அனுப்பியிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com