சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 71 வழக்குகளில் 105 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 67 கிலோ கஞ்சா, 51 கிராம் மெத்தம்பெட்டமைன்,116 கிராம் ஆம்பெட்டமைன்,7,125 போதை மாத்திரைகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், 14 கைப்பேசிகள், 2 மடிக்கணினி, ஒரு ஐ-பேடு, 6 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் எனவும் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.