ஜல்ஜீவன் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்: மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் போதுமான குடிநீா் வழங்குவதை உறுதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் 542 கூட்டுக் குடிநீா் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ரூ.2,208 கோடி மொத்த மதிப்பீட்டில் 5.64 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 6 புதிய கூட்டு குடிநீா் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். குடியிருப்புக்கு குடிநீா் (ஜல்ஜீவன்) திட்டத்துக்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.