தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 36,285 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 24 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மற்றொருபுறம் மேலும் 118 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 13,639-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 670 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா உயிரிழப்பு 4ஆவது நாளாக இன்று ஏதும் பதிவாகவில்லை. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 38,025 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.