தடுப்பூசி போடாதவர்களால்தான் கரோனா உருமாற்றம் அடைவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என பல மாநில அரசுகள் அறிவித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது.
இதில், தமிழக அரசுத் தரப்பில் கூறியதாவது:
“தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களால்தான் கரோனா உருமாற்றம் அடைந்து கொண்டு வருவதாக நிபுணர்கள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர்.
எனவே, மத்திய அரசு கூறியதையடுத்து தமிழகத்தில் 100 சதவிகிதம் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு எடுத்து வருகின்றது” எனத் தெரிவித்துள்ளனர்.