தேனாம்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில் ரூ.4.51  கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தேனாம்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில் ரூ.4.51  கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட செனடாப் சாலையில் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 870 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுபோல சி.வி.ராமன் சாலையில் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 610 மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.3.2022) கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில்  ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை சீரமைத்திட 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

முதல்வர், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றன.

வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க முதல்வர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட செனடாப் சாலையில் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 870 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும்  சி.வி.ராமன் சாலையில் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 610 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் என மொத்தம் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, சி.வி. ராமன் சாலை முதல் டி.டி.கே. சாலை வரை நடந்தே சென்று அப்பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வருகின்ற பருவமழை காலத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு,  முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப.,  மாமன்ற உறுப்பினர்கள் ஷீபா வாசு, கி.மதிவாணன், மோ.சரஸ்வதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com