விருதுநகா் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய திமுகவைச் சோ்ந்தவா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
அவரது அறிவிப்பு விவரம்:-
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயா் ஏற்படுத்தியதாக விருதுநகா் வடக்கு மாவட்டம் ஜூனைத் அகமது கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறாா் என்று தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.