நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர், அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர்.
ராமேசுவரத்திலிருந்து மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறிய 2 விசைப்படகுகளுடன் 16 மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.