தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை 19ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி நேரம் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்து பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவையில் இன்று காலை அமளியில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.