இலங்கை கடற்படையினரைக் கண்டித்து நாளை(மார்ச்-25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் மற்றும் அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்று புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி நாளை(மார்ச்-25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.