சென்னை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வியாழக்கிழமை(இன்று) நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நான்கு ஆண்டுகள் அல்லது 67 வயது வரை பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்த புஷ்பா சத்தியநாராயணா பிப்ரவரி 27-ல் ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.