தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அப்பாவு வியாழக்கிழமை அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்தார். தொடர்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கையை 19ஆம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. பட்ஜெட் குறித்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இதையும் படிக்க | ‘தமிழகம் ஏழை மாநிலம் அல்ல; வளர்ந்த மாநிலம்’: நிதியமைச்சர் பதிலுரை
இந்நிலையில், பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதத்திற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பதிலுரை வழங்கினர்.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இதையும் படிக்க | இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலம்’: முதல்வர் ஸ்டாலின்