புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா இதுவரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வரவில்லை என்று சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
மக்களைவில் திமுக எம்பி ஆ.ராசாவின் கேள்விக்கு சுகாதாரத் துறை இணையமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க.. பெண் செய்தியாளர் எழுதிய 3 உருக்கமான தற்கொலை கடிதங்கள்
தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு வந்ததா? என்று ஆ. ராசா கேள்வி எழுப்பியிருந்தார்.