சிம் மற்றும் மெமரி கார்டை திரும்ப அளித்த செல்லிடப்பேசி திருடர்கள்: அதுவும் எப்படி?

சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரிடமிருந்து பைக்கில் வந்த இரண்டு பேர் செல்லிடப்பேசியை திருடிச் சென்ற நிலையில், அதிலிருந்த சிம் மற்றும் மெமரி கார்டை திரும்ப அளித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள
சிம் மற்றும் மெமரி கார்டை திரும்ப அளித்த செல்லிடப்பேசி திருடர்கள்
சிம் மற்றும் மெமரி கார்டை திரும்ப அளித்த செல்லிடப்பேசி திருடர்கள்


சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரிடமிருந்து பைக்கில் வந்த இரண்டு பேர் செல்லிடப்பேசியை திருடிச் சென்ற நிலையில், அதிலிருந்த சிம் மற்றும் மெமரி கார்டை திரும்ப அளித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த முடிச்சூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இது குறித்து காவலர்கள் கூறுகையில், ராகவேந்திரா என்ற இளைஞர் முடிச்சூர் அருகே காந்தி நகரில், செல்லிடப்பேசியில் பேசியபடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு பேர், ராகவேந்திராவிடமிருந்து செல்லிடப்பேசியை பிடுங்கியுள்ளனர்.

அவர்களிடமிருந்து செல்லிடப்பேசியை காப்பாற்றிக் கொள்ள ராகவேந்திரா கடுமையாகப் போராடியுள்ளார். ஆனால், அனைத்து முயற்சிகளும் வீணானது. செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டுச் சென்ற பைக்கைத் துரத்திக் கொண்ட ராகவேந்திராவும் சிறிது தூரம் ஓடியுள்ளார்.

அப்போது, பைக்கில் சென்ற செல்லிடப்பேசி கொள்ளையர்களில் ஒருவர், செல்லிடப்பேசியிலிருந்து சிம் மற்றும் மெமரி கார்டை எடுத்து ராகவேந்திராவை நோக்கி வீசியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து ராகவேந்திரா காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ளார். இதே செல்லிடப்பேசி கொள்ளையர்கள், வரதராஜபுரம் அருகே மற்றொரு கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் கொள்ளையர்களைத் தேடி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com