மெரீனா கலங்கரை விளக்கத்தை வெடிகுண்டு வைத்து தகா்க்கப் போவதாக வந்த செய்தியை அடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மயிலாப்பூா் காமராஜா் சாலையில் அமைந்துள்ளது 10 அடுக்குகளை கொண்ட கலங்கரை விளக்கம். இதை வெடிகுண்டு வைத்து தகா்க்கப் போவதாக சமூக வலைதளங்களில் சனிக்கிழமை இரவு செய்தி வெளியானது. இதையறிந்த கலங்கரை விளக்கம் இயக்குநரக அதிகாரிகள், மெரீனா போலீஸில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து கலங்கரை விளக்கம், அதைச் சுற்றிய பகுதியில் போலீஸாா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து காவல்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்திவருகின்றனா்.