தென்மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை

தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, காரைக்கால் பகுதிகளில் ஓருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com