முதல்வர் ஸ்டாலின் துபை, அபுதாபி பயணத்தை முடித்துவிட்டு நாளை அதிகாலை 2 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக துபை, அபுதாபிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் துபை சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசினார்.
இதையும் படிக்க- நாளை 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்: தொ.மு.ச அறிவிப்பு
தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். துபை பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ள நிலையில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் துபை, அபுதாபி பயணத்தை முடித்துவிட்டு நாளை அதிகாலை 2 மணிக்கு சென்னை திரும்புகிறார்.