தமிழ்நாடு
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2,360 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2,360 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த லேசான மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து. நேற்று திங்கள்கிழமை காலை வினாடிக்கு 2,348 கன அடியாகவும், இன்று செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 2,360 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம்: திங்கள்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 105.07 அடியாக உயர்ந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை 105.10 அடியாக உயர்ந்துள்ளது .
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு: அணையின் நீர் இருப்பு 71.60 டி.எம்.சியாக உள்ளது.