எல்லை தாண்டி மீன்பிடித்த 3 புதுக்கோட்டை மீனவர்கள் கைது 

சர்வதேச கடல் எல்லைக் கோடு (ஐஎம்பிஎல்) தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். 
எல்லை தாண்டி மீன்பிடித்த 3 புதுக்கோட்டை மீனவர்கள் கைது 

சென்னை: சர்வதேச கடல் எல்லைக் கோடு (ஐஎம்பிஎல்) தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 102 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்களில் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த டி. விஸ்வலிங்கம் (50), ஆர். சக்திவேல் (38), எஸ். கலைமாறன் (29) ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடரும் இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதன்கிழமை இரவு 3 மீனவர்களை கைது செய்ததோடு, ஒரு இயந்திர மீன்பிடி படகையும் இலங்கை கடற்படை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக தமிழக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு மீனவர் சங்கத்தினர் வேதனையும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். 

இலங்கை கடற்படையினர் இந்த வாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு இந்திய மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது படகுகளையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2022 முதல், தமிழகத்தைச் சேர்ந்த 87 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் சுமார் 42 பேர் விடுவிக்கப்பட்டனர். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 45 இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளனர்.

புதன்கிழமை, நாகப்பட்டினத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர் ஒருவரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com