ரமலான் பண்டிகை தினத்தில் (மே 3) சென்னை புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையைப் பின்பற்றி இயக்கப்படும், முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.
ரமலான் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை ( மே 3) கொண்டாடப்படுகிறது. தேசிய விடுமுறை நாளான இந்த நாளில், சென்னை புகா் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூளூா்பேட்டை, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயக்கப்படும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் ஒரு ஷிப்ட் மட்டும் இயங்கும். அதாவது, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.