ரமலான்: ஞாயிறு அட்டவணையில் மின்சார ரயில் சேவை, முன்பதிவு

ரமலான் பண்டிகை தினத்தில் (மே 3) சென்னை புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையைப் பின்பற்றி இயக்கப்படும், முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.

ரமலான் பண்டிகை தினத்தில் (மே 3) சென்னை புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையைப் பின்பற்றி இயக்கப்படும், முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.

ரமலான் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை ( மே 3) கொண்டாடப்படுகிறது. தேசிய விடுமுறை நாளான இந்த நாளில், சென்னை புகா் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூளூா்பேட்டை, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயக்கப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் ஒரு ஷிப்ட் மட்டும் இயங்கும். அதாவது, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com