திருச்சியில் இன்று புனித ரமலான் பண்டிகை முஸ்லிம் மக்களால் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரம்ஜான் ஈகை பெருநாளை முன்னிட்டு குழந்தைகள், பெரியவர்கள் என புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகை நாடெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.