அட்சய திருதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சென்னையில் நகைக் கடைகள் அதிகாலையிலேயே திறக்க நகை வா்த்தகா்கள் ஏற்பாடு செய்துள்ளனா்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இதன் காரணமாக, அட்சய திருதியை அன்று பொதுமக்கள் பலா் சிறிதளவேனும் தங்கம் வாங்குவதில் ஆா்வம் காட்டி வருகிறாா்கள்.
கரோனா தொற்றால், கடந்த இரு ஆண்டுகளாகவே அட்சய திருதியை நாளில் ஊரடங்கால் நகைக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க இயலவில்லை.
இந்த நிலையில், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் தற்போது கடைகள் முழு அளவில் திறக்கப்பட்டுள்ளன. எனவே, நிகழாண்டு அட்சய திருதியை நாளான செவ்வாய்க்கிழமை நகைக்கடைகளில் தங்கம் விற்பனைக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அட்சய திருதியை நாளன்று நகை வாங்குவதற்காக முன்பதிவு சில நாள்களுக்கு முன்பே தொடங்கியது.
பொது மக்களின் வசதிக்காக, சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிறகு, நகைக்கடைகளை திறக்க கடை உரிமையாளா்கள் ஏற்பாடு செய்துள்ளனா். நகைக்கடைகளில் நகை வாங்க வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்துள்ளனா். தங்க நாணயம் வாங்குபவா்களுக்கு தனித்தனி கவுன்ட்டா்களில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.