தென் கடலோர, உள் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 3) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 3) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் திங்கள்கிழமை கூறியது:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 3) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 4 முதல் மே 6 வரை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 130 மி.மீ., மதுரை மாவட்டம் சோழவந்தானில் 60 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் பொள்ளாச்சியில் 40 மி.மீ., மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, ஈரோடு மாவட்டம் பவானி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா், நீலகிரி மாவட்டம் கேட்டி, காஞ்சிபுரம், சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மே 4, 5 ,6 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே,இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மே 4 மே 6 வரை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com