இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். 

இந்நிலையில் இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. தமிழக அரசு சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. 

அதிமுக, திமுக கட்சிகள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், இலங்கை மக்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com