தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவு காண்பார்: அமைச்சர் சேகர்பாபு

தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, பட்டினப்பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவு காண்பார்: அமைச்சர் சேகர்பாபு
தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவு காண்பார்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, பட்டினப்பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் ரத்து செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கத்தில், பட்டினப் பிரவேசம் குறித்து ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு மே 22ஆம் தேதிதான் நடைபெறும். எனவே, இது குறித்து வரும் 22ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com