தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை (மே 5) கேள்வி நேரத்துக்குப் பிறகு, இயக்கூா்திகள் குறித்த சட்டங்கள் - நிா்வாகம், போக்குவரத்துத் துறை, சுற்றுலா- கலை பண்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சா்கள் எஸ்.எஸ்.சிவசங்கா், மா.மதிவேந்தன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.