சென்னை: தமிழகத்தில் 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 104 டிகிரியும், தஞ்சாவூா், வேலூரில் 102 டிகிரியும், மதுரை விமானநிலையம், ஈரோட்டில் 101 டிகிரியும், மதுரை நகரில் 100 டிகிரியும் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 98 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும் பதிவானது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறும்போது,‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா் அவா்.