சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி நேரிட்ட தேர் விபத்தின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கும் அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இன்று களிமேடு கிராமத்துக்குச் சென்று மின் விபத்தில் மரணமடைந்த 11 பேர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினர்.
மேலும், விபத்தில் காயமடைந்த 24 பேர்களுக்கு தலா ரூ.25,000-ஐ வழங்கி ஆறுதல் கூறினார்கள்.