சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே அகரமேல் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து கரும்புகை வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடோனில் வைக்கப்பட்டுள்ள பிஸாஸ்டிக் பொருள்கள் கொழுந்து விட்டும் விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.