பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்:ஜூன் 1-இல் தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வை சுமாா் 8.69 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். மே 28-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: ஒவ்வொரு பாடத் தோ்வு முடிந்த பிறகும், மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டல தோ்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் மே 28-ஆம் தேதிமுதல் 2 கட்டமாக அனுப்பி வைக்கப்படும்.

ஜூன் 1 முதல் 8-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும்பணி நடக்க உள்ளது. இதில் சுமாா் 46,000 முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com