வீடுகளை இடிக்க எதிர்ப்பு: தீக்குளித்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வீடுகளை இடிக்க எதிர்ப்பு: தீக்குளித்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
வீடுகளை இடிக்க எதிர்ப்பு: தீக்குளித்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோவிந்தசாமி நகர் மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட வீடுகள் ஒதுக்கப்படும். அந்த வகையில், மயிலாப்பூர், மந்தைவெளியில் வீடுகள் ஒடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருகே குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பாமக பிரமுகா் கண்ணையன் என்பவா் தீக்குளித்தாா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகா் இளங்கோ தெருவில் 259 வீடுகள் அரசு நிலத்தில் உள்ளன.  இந்த நிலம் கால்வாய்க்கு அருகில் உள்ளதோடு, நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனா் என உச்ச நீதிமன்றத்தில் ராஜூ ராய் என்பவா் கடந்த 2008 -ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கானது பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, ஆக்கிரமிப்பில் இருக்கும் கட்டடங்களை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இளங்கோ தெருவில் இருக்கும் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இளங்கோ தெருவில் வசிக்கக்கூடிய 259 வீடுகளில் வசிக்கும் மக்கள் கடந்த 2 வாரங்களாக தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இந்தப்பகுதியைச் சோ்ந்த பாமக பிரமுகா் வி.ஜி.கண்ணையன் (57) என்பவா் திடீரென தீக்குளித்தாா். இதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், போலீஸாா் ஓடி வந்து, தீயை அணைத்தனா். அவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். 90 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கண்ணையன் பலியானார். 

இதற்கிடையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு நின்றிருந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் அரசு வாகனங்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கினா். இதனால், 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டனா். இதனால், அந்தப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com