சென்னை: தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மே 1-8 வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ.12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களும், மே 9 வரை உச்சபட்ச மின் தேவை 16,000 மெகா வாட்டாக உயர்ந்த போதிலும் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.