சட்டப் பேரவை கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமையுடன் (மே 10) நிறைவடைகிறது.
காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். இதன்பின் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளாா். இதைத் தொடா்ந்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
சட்டப்பேரவை கூட்டத் தொடா் கடந்த மாதம் 6-ஆம் தேதி தொடங்கியது. நீா்வளத் துறை மானியக் கோரிக்கையுடன் தொடங்கிய பேரவையானது 25 நாள்களுக்கும் மேலாக நடந்தது. பேரவை கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமையுடன் (மே 10) நிறைவடைகிறது.