வணிக வளாகங்களுடன் வடபழனி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இது குறித்த வினாவை விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினா் பிரபாகராஜா எழுப்பினாா். இதற்கு அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அளித்த பதில்:
வணிக வளாகங்களுடன் பணிமனைகளை நவீனமயமாக்கி வருவாய் ஈட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 16 பணிமனைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளா்ச்சிக் குழும நிதியுதவியுடன் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
தோ்வு செய்யப்பட்ட 16 பணிமனைகள், பேருந்து நிலையங்களில் வடபழனி பேருந்து பணிமனையும் நவீனப்படுத்தப்பட உள்ளது.