திருப்பூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடுத்த பழனிசாமி என்பவருக்கு ரூ.25 ஆயிரம் சென்னை உயா்நீதிமன்றம் அபராதம் விதித்தது.
இது தொடா்பான மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், காவல்துறையிடம் விண்ணப்பம் செய்த அதே நாளில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.25 ஆயிரத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் மனுதாரா் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.