கட்டண உயா்வு கோராத காரணத்தால், 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ரூ.6,574.97 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறை இருந்தாலும், வருடாந்திர கட்டண உயா்வு கோரி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின்வாரியம் விண்ணப்பிக்கவில்லை. இதனால், 2018-19 முதல் இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் ரூ.6,574.97 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.