நெல்லை நெல்லையப்பர் கோயில் வருஷாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இந்த விழாவினை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து சுவாமி சன்னதி மகாமண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகளுக்குப பின்னர். சுவாமி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் திருக்கோயில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.