சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியை தடை செய்ததற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
ஆம்பூர் மே 13-15இல் நடைபெற இருந்த பிரியாணி திருவிழாவை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாற்றியமைத்தாக கூறினார். மாட்டிறைச்சியைத் தவிர்த்தது குறித்து விளக்கம் கேட்டு ஆணையம் ஆட்சியருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் அளித்த நோட்டீஷில் குறிப்பிட்டு இருந்ததாவது: நடைபெற இருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியைத் தவிர்த்து என்றவாறு குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருக்கிறீர்கள். திருப்பத்தூரில் 2 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாம் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் வாழ்கின்றனர். இங்கு மாட்டிறைச்சியைத் தவிர்த்து தீண்டாமையை கடைபிடிக்கப்படுவதாக தெரிகிறது.
இதற்கிடையில் திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாகா கூறியதாவது: மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி பிரியாணி இரண்டையுமே மத நுண்ணுர்வு புண்படுமென்று தடை செய்து இருக்கிறோம். மேலும் மழைபொழிவுக் காரணங்களால் வேறொரு நாளுக்கு மாற்றியமைத்து இருக்கிறோம்.