அரக்கோணத்தில் நள்ளிரவில் ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் சாதுரியமாகக் காப்பாற்றினர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோ (69) வயது முதியவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் நடை மேடை 7-ல் நின்ற மின்சார ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புக் காவலர்கள் உடனடியாக நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு ரயில்வே ஊழியர்களை வரவழைத்து சாதுரியமாக செயல்பட்டு முதியவரை பத்திரமாக மீட்டுள்ளனர். எனினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தற்கொலை முயற்சி குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.