சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உயா் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான், எம்பி.ஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு என்று அழைக்கப்படும் ‘டான்செட்’ தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்த ‘டான்செட்’ தோ்வு மே 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கரோனா தொற்றுக்கு பிறகு சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாள்கள் கல்லூரி வேலை நாள்களாக உள்ளது. இந்த நிலையில் ‘டான்செட்’ தோ்வில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்பதற்கு வசதியாக சனிக்கிழமை தமிழகத்தில் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உயா் கல்வித்துறைச் செயலாளா் காா்த்திகேயன் அறிவித்துள்ளாா்.