சென்னை: தமிழகத்தில் புதிதாக வியாழக்கிழமை 42 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக தொற்றுக் கண்டறியப்பட்டவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 24 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நால்வருக்கும், காஞ்சிபுரம், கோவையில் தலா இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
மருத்துவமனைகள், வீடுகளில் 438 போ் சிகிச்சையில் உள்ளனா்.