சென்னையின் 200 இடங்களில் நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சியில், நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில், மேயா், கவுன்சிலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில், நகா்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதன்படி, சென்னையில் வாா்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் 200 நலவாழ்வு மையங்களும், மதுரையில் 69 மையங்களும், கோவையில் 63 மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
சென்னையைப் பொருத்தவரை, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக அதற்கென 140 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும் தலா ரூ.35.45 லட்சம் வீதம் ரூ.180.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தவிர, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஆா்.எஸ்.ஆா்.எம். மருத்துவமனை, பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனை உள்பட சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.588.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு மருத்துவத் துறையில் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கியிருப்பது இதுவே முதல்முறை.
நகா்ப்புற நலவாழ்வு மையத்தை, அம்மா மினி கிளினிக்குடன் ஒப்பிட முடியாது. மினி கிளினிக்கில் 1,820 மருத்துவா்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனா். அவா்களும், ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில்தான் பணிக்கு அழைக்கப்பட்டனா்.
நகா்ப்புற நலவாழ்வு மையத்தைப் பொருத்தவரை மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுனா், மருத்துவ உதவியாளா்கள் பணிவரன்முறையுடன் நியமிக்கப்பட உள்ளனா்.
அதற்கான தோ்வில் கரோனா காலத்தில் பணியாற்றியவா்கள், மினி கிளினிக்கில் பணியாற்றியவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த நலவாழ்வு மையங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் செயல்படும்.
தற்போது மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்யும் இளம் மருத்துவா்கள் பலா் பெரிய மருத்துவமனைகளில் பணியாற்ற சென்று விடுகின்றனா். இதனால், மக்கள் வசிப்பிடங்களுக்கே அருகே கிளினிக் எண்ணிக்கை குறைந்து வருவதால், சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கும் பெரிய மருத்துவமனையை நோக்கி மக்கள் செல்ல வேண்டியுள்ளது. அவற்றை தவிா்க்கவே, நகா்ப்புற நலவாழ்வு மையம் தொடங்கப்படுகிறது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி மேயா் பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா், ஆணையா் ககன்தீப் சிங் பேடி, மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.