சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் 2 நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பகல் 12 மணிமுதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
அம்பத்தூர், செங்குன்றம், கூடுவான்சேரி, குரோம்பேட்டை, போரூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வரும் நிலையில், சென்னை முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.