சென்னையிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கைக்கு புதன்கிழமை கப்பல் புறப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அத்தியாவசிய பொருள்கள், உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உதவ நிவாரணம் வழங்க தமிழக மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் உதவிகளை வழங்கினர்.
இதையும் படிக்க | திரிகோணமலையில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபட்ச?
இந்நிலையில், சென்னையிலிருந்து கப்பல் மூலம் ரூ. 80 கோடி மதிப்பில் 40,000 டன் அாிசி, ரூ. 15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பில் 137 டன் மருந்து பொருள்கள் நாளை காலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.