சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகளை மூட வேண்டும்: விஜயகாந்த்

சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகளை உடனடியாக தமிழக அரசு மூட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகளை உடனடியாக தமிழக அரசு மூட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே உள்ள கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் 6 தொழிலாளா்கள் சிக்கிய நிலையில் 2 போ் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். இந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

விதிகளை மீறி இரவு நேரத்தில் கல்குவாரி செயல்பட்டதாலேயே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் மீட்புப் பணியை துரிதப்படுத்தி இருந்தால் தொழிலாளா்களை உயிருடன் மீட்டிருக்கலாம். ஆனால் விபத்து ஏற்பட்டு பல மணி நேரமாகியும் மீட்புப் பணியை துரிதப்படுத்தாமல் அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டனா்.

தொழிலாளா்களின் உயிருடன் விளையாடிய அரசு அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாகச் செயல்படும் கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com