சென்னை: கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாநில வளர்ச்சிக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்; சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் வளர்ச்சி இருக்க வேண்டும்.
கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் திறன் வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் பண்ணைக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஜன்ஜீவன் திட்டம் மூலம் 14 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிக்க | கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை கைது செய்தது சிபிஐ