வென்றது நீதியும் அற்புதம் அம்மாளின் போர்க்குணமும் என பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று வெளியான தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தீர்ப்பிற்கு நடிகரும், மக்கள்நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.