தமிழகத்தில் புதன்கிழமை கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 321-ஆக உள்ளது.
புதிதாக 35 பேர் பாதிப்புக்குள்ளானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக சென்னையில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 3 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 39 பேர் விடுபட்டு வீடு திரும்பியதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,16,376-ஆக அதிகரித்தது.