பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோனையில் ஈடுபட்டுள்ளார்.
உதகையில் இருந்து காணொளி மூலம் சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தலைமைச் செயலர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதையும் படிக்க- சுடுமண்ணால் ஆன சோழர் காலத்து ஏழு உறை கிணறுகள் கண்டெடுப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையான நிலையில் சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.